தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக 1995ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய்.
இதைத்தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், துள்ளி திரிந்த வானம், கண்ணால் பேசவா, முத்தம், இயற்கை, தவம், வேதா என்று எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2012ல் தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தல அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக வில்லனாக அவதாரம் எடுத்தார்.
இந்த படம் அவருக்கு ஒரு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாகோ போன்ற மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார் அருண் விஜய். தற்பொழுது இவர் வணங்கான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
நடிகர் அருண் விஜய் ஆர்த்தி என்பவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது புர்வீ என்ற ஒரு மகளும், அர்ணவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் அருண் விஜயின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா?’ என்று ஆச்சரிமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…
சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…
நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…
சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…