தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. நடிகர் அஜித் நடிகை ஷாலினி 2000ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தல அஜித்திற்கு ஒரு மச்சினிச்சி உள்ளார். அவர் பெயர் ஷாமிலி. இவர் 1990ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ திரைப்படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து அனைவரையும் அசத்தியவர் பேபி ஷாமிலி. இதற்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்தது.
இதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். இவர் 2016 விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஷாமிலி கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஷாமிலி. இவர் அப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் வெளிநாட்டில் சுற்றி தெரியும் ஜாலியான வீடியோ ஒன்றை ஷாமிலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ இதோ….
கவின் திரைப்படத்தின் மூலம் பிரபலமான அபர்ணா தாஸ் தனது காதல் கணவர் தனக்கு ப்ரபோஸ் செய்த முறையை ஒரு பேட்டியில்…
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தின் 4-வது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
அஞ்சாமை திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படத்தில் விதார்த் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை வாணி போஜன்…
நடிகை அஞ்சலி தனது 38வது பிறந்த நாளை வெளிநாட்டில் மிகச் சிறப்பாக கொண்டாடி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில்…
விமானத்தில் ஒரு ரசிகையின் செயலைப் பார்த்து தான் ஆச்சரியப்பட்டு போனதாக மோகன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக்…
சித்ராலயா கோபு இயக்குனராக மட்டுமில்லாமல் திரை உலகில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இவர் காசேதான் கடவுளடா, பெண் ஒன்று கண்டேன்,…