#image_title
பிரதோஷ விரதம் மற்றும் வழிபாடு சைவ மக்களால் கடைபிடிக்கப்படும் சிவ விரதங்களில் முக்கியமான ஒன்றாகும். இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு திதிகளில் நிகழும். சூரியன் மறைவதற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையும் உள்ள காலமே பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.
பொதுவாக மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரையே பிரதோஷ நேரம் என்று குறிப்பிடுவார்கள். பிரதோஷ தினத்தன்று காலையில் எழுந்து நீராடி அன்றைய தினம் விரதம் இருக்க வேண்டும். மாலை நேரத்தில் சிவாலயங்களுக்கு சென்று சிவாய நம என்று ஐந்து எழுத்து மந்திரத்தை மனம் உருகி ஜெபிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் திருமுறையை படித்தால் கூடுதல் சிறப்பு.
பிரதோஷ தினத்தன்று உணவருந்தாமல் விரதம் இருந்து சிவாலயங்களுக்கு செல்லும்போது அங்கு சிவனுக்கும் நந்தி தேவர்க்கும் அபிஷேகத்திற்கு ஒரு சில பொருட்களை வாங்கி கொடுப்பது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. அது என்னவென்றால், சிவனுக்கு தூய நல்லெண்ணெய் வாசனை திரவியங்கள் கலந்து அபிஷேகத்துக்கு கொடுத்து வந்தால் நோயற்ற வாழ்வு நமக்கு கிடைக்கும். சுத்தமான பசும்பாலில் அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் வாழ்வில் செல்வம் பெருகும். சர்க்கரை கொண்டு அபிஷேகம் செய்தால் மன நிறைவு உண்டாகும்.
முக்கியமாக சனிக்கிழமைகளில் நிகழும் பிரதோஷ திதி மிகவும் சிறப்பானதாகும். அன்றைய தினம் சிவபெருமானையும் நந்தி தேவரையும் வழிபடுவதால் சகல விதமான தோஷங்களும், பாவங்களும் துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோஷங்களில் சனிக்கிழமை வரும் பிரதோஷத்தை மகா சனி பிரதோஷம் என்றும் கூறுவர். பிரதோஷம் அன்று விரதம் இருந்து சிவாலயங்களுக்கு சென்று சிவனை தரிசித்து விட்டு வீட்டிற்கு வந்த பிறகு தான் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
பீகார் மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் தொழிலாளி ஒருவர், தன்னை கடித்த பாம்பை அடையாளம் காட்டுவதற்காக மூன்று கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளுடன்…
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, கள்ளக்காதலியுடன்…
தமிழகத்தில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட வேளையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி வைஷ்ணவி செய்த…
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…
தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு…