#image_title
அக்கினேனி நாகார்ஜுனா என்று அழைக்கப்படும் நாகார்ஜுனா தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை அக்கினேனி நாகேஸ்வர ராவ் தெலுங்கு சினிமாவில் பணியாற்றிய நடிகர் ஆவார். நாகார்ஜுனா தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தனது தந்தை நடிகராக இருந்ததால் அதன் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் நாகார்ஜுனா.
தெலுங்கு இந்தி தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நாகார்ஜுனா. தெனிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். 90-க்கும் மேற்பட திரைப்படங்களில் நடித்துள்ளார் நாகார்ஜுனா. 10 மாநில விருதுகளையும் நந்தி விருதுகளையும் பல பிலிம்பேர் விருதுகளையும் வென்று இருக்கிறார் நாகார்ஜுனா.
தமிழில் இவர் கார்த்தியுடன் இணைந்து நடித்த தம்பி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. தென்னிந்தியாவின் மிகப் புகழ்பெற்ற நடிகர்களுள் ஒருவராக திகழும் நாகார்ஜுனா ஒரு நிஜ வாழ்க்கை ராஜவாக வாழ்ந்து வருகிறார். அவருடைய சொத்து மதிப்பு என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம்.
நாகார்ஜுனாவுக்கு 20 ஏக்கரில் அன்னபூர்ணா ஸ்டுடியோ என்ற தனது தந்தை ஆரம்பித்த பிலிம் சிட்டியை பராமரித்து வருகிறார். 45 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரைவேட் பங்களா இவருக்கு ஹைதராபாத்தில் இருக்கிறது. பல விலையுயர்ந்த கார்கள் இரண்டு கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் ரேஞ்ச் ரோவர் கார்கள் ஆகியவற்றை வைத்திருக்கிறார் நாகார்ஜுனா.
800 கோடி மதிப்புள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் கேரளா பிளாஸ்டர் என்ற புட்பால் நிறுவனத்தில் ஒரு பார்ட்னராக இருந்து வருகிறார். இதன் மதிப்பு 300 கோடி. இது மட்டுமல்லாமல் 20 கோடி மதிப்பில் தனி விமானம் வைத்திருக்கிறார் நாகார்ஜுனா. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனாவுக்கு 100 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இவரின் மொத்த சொத்து மதிப்பு 3100 கோடி ஆகும். இதன் மூலம் ரியல் ராஜாவாக வாழ்ந்து வருகிறார் நாகார்ஜூனா என்பது நமக்கு தெரிகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…