#image_title
சரோஜாதேவி 1950 அறுபது காலகட்டத்தில் தென்னிந்தியவே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரபலமான புகழின் உச்சத்தில் இருந்த நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ராதா தேவி என்பதாகும். சரோஜாதேவி மைசூர் ராஜ்யத்தில் பிறந்து வளர்ந்தவர். இளம் வயதிலேயே இவரது தந்தை இவரை நடனம் கற்றுக் கொள்ளும்படி கூறினார்.
நடனம் கற்க ஆரம்பித்த சரோஜாதேவிக்கு சினிமாவின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. பிறகு சினிமாவில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரது தாயார் சினிமாவில் நடித்தாலும் கூட நீச்சல் உடைகள் அரைகுறை ஆடைகள் அணிந்து நடிக்க கூடாது என்று கூறி கட்டுப்பாடுகள் விதித்தார். அதே போல் வாழ்நாள் முழுவதும் பின்பற்றி அரைகுறை ஆடையுடன் நடிக்காமல் இருந்தார் சரோஜாதேவி என்பது குறிப்பிடத்தக்கது.
சரோஜாதேவி தமிழ் தெலுங்கு ஆசிய மொழி திரைப்படங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சரோஜாதேவி தமிழ் திரையுலகில் 1960 முதல் 1970 வரையிலான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்தவர் சரோஜாதேவி மட்டும்தான். இவரை அந்த காலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்தனர். ஏனென்றால் நடிகர்கள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக சரோஜா தேவியும் அதிகப்படியான சம்பளத்தை வாங்கி இருக்கிறார்.
எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் ஆகிய மூன்று பேருடன் அதிகப்படியான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சரோஜாதேவி. இவர் எம்ஜிஆர் உடன் 26 படங்களிலும் சிவாஜிகணேசன் உடன் 22 படங்களிலும் நடித்து புகழ்பெற்றிருக்கிறார். இது மட்டுமல்லாமல் எஸ் எஸ் ராஜேந்திரன் முத்துராமன் ஏவிஎம் ராஜன் ரவிச்சந்திரன் ஆகிய பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் சரோஜாதேவி.
1960 லிருந்து 70 காலகட்டத்தில் பத்மினி சாவித்திரி சரோஜாதேவி ஆகிய மூவரையும் முப்பெரும் முன்னணி கதாநாயகிகள் என்று மக்கள் அழைத்தனர். 1967 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சரோஜாதேவி பின்னால் தனது கணவரின் சம்மதத்தோடு மறுபடியும் நடிக்க ஆரம்பித்தார். இந்தி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சரோஜாதேவி.
சரோஜா தேவியை மக்கள் அன்போடு கன்னடத்து பைங்கிளி அபிநய சரஸ்வதி ஆகிய அடைமொழிகளால் அழைத்தனர். இது மட்டுமல்லாமல் தனது அபாரமான நடிப்பிற்காக பல திரைப்பட விருதுகளையும் இந்திய அரசின் பத்மபூஷன் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளையும் வென்றிருக்கிறார். சரோஜாதேவி 85 வயது கடந்த பின்பும் இன்றளவும் சரோஜா தேவியின் புகழ் அவருக்கான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…
திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…