உத்திரபிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். பிறகு கடந்த 12ம் தேதி சிறுமி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
அதாவது அதே பகுதியை சேர்ந்த பாபு ராம் என்ற 21 வயது நபர் சிறுமியை கடத்திச் சென்றதும் மராட்டிய மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட இடங்களுக்கு சிறுமியை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. சிறுமியை 25 நாட்களுக்கு மேலாக கடத்தி வைத்திருந்த அந்த நபர் தொடர்ந்து அவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். பிறகு சிறுமியை போலீசார் தேடுவதை அறிந்ததும் உத்திரபிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளார். இந்த தகவலை சிறுமி போலீசாரிடம் தெரிவித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…