“அவரை மட்டும் ஏன் குத்தினார்?”… கோவையில் காதல் விவகாரத்தில் உயிரைப் பறித்த ஆத்திரக் கொலை… பின்னணி என்ன?..!!!

Spread the love

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நாகமநாயக்கன்பாளையம் பகுதியில், காதல் விவகாரத்தில் ஹோட்டல் உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த திலீபன் என்பவர் நடத்தி வந்த ஹோட்டலில், அன்பு எஸ்தர் என்ற பெண் பணியாற்றி வந்தார்.

இதனால் ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்த பிரேம் ஆனந்த் என்ற ஆட்டோ ஓட்டுநர், எஸ்தரை நான்காவதாக திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். ஆனால், எஸ்தர் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, ஹோட்டல் உரிமையாளர் திலீபனுடன் நெருக்கமாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த், கடந்த ஜனவரி மாதம் இருவரையும் கொல்ல முயன்று சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை எஸ்தரின் வீட்டிற்குச் சென்ற பிரேம் ஆனந்த், அங்கு திலீபன் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்து அவரை கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார். அதோடு நிறுத்தாமல், வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைக்கவும் முயற்சித்துள்ளார்.

மேலும் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த எஸ்தர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலை குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் பிரேம் ஆனந்தைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rajeshwari

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

3 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

3 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

4 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

4 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

4 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

4 மணத்தியாலங்கள் ago