ரஷ்யாவுக்கு வந்த ‘சுக்கிர திசை’… ஈரான் போரால் ரஷ்யாவிற்கு அடித்தது ஜாக்பாட்… 64,000 கோடி லாபம் கொட்டியது எப்படி..?

Spread the love

உக்ரைன் மீதான போரால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்ட ரஷ்யாவுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள ஈரான்-அமெரிக்கா மோதல் ஒரு எதிர்பாராத வரப்பிரசாதமாக மாறியுள்ளது. ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தினால், உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் விநியோகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இந்த நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி, சர்வதேச சந்தையில் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த அர்ஜ்வால்டு அமைப்பின் தகவல்படி, கடந்த சில நாட்களில் மட்டும் ரஷ்யா சுமார் 7 பில்லியன் டாலர் (சுமார் ₹64,000 கோடி) மதிப்புள்ள கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 14 சதவீதம் கூடுதல் வருவாயாகும். மேற்கத்திய நாடுகளின் தடைகளைத் தவிர்க்க, பழைய கப்பல்களைக் கொண்டு ஒரு தனிப்படையையே ரஷ்யா உருவாக்கியிருந்தது, அது இப்போது அந்நாட்டிற்கு பெரும் பலனளித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலர் வரை எகிறிய நிலையில், விலையைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதாலும், செங்கடல் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தாலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது சவாலாக மாறியுள்ளது. போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், வேறு வழியின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் எண்ணெயை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

முன்னதாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீது கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, தற்போது நிலவும் உலகளாவிய எண்ணெய் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவின் சில கப்பல்கள் எண்ணெய் கொண்டு செல்ல தற்காலிகமாக அனுமதி வழங்கியுள்ளது. ஒருகாலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ரஷ்யா, தற்போது நிலவும் புவிசார் அரசியல் மாற்றங்களால் உலகின் தவிர்க்க முடியாத எண்ணெய் விநியோகஸ்தராக மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இந்த ‘சுக்கிர திசை’ ரஷ்யப் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய பொற்காலத்தை உருவாக்கியிருப்பதாகவே சர்வதேச வர்த்தக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Nanthini

Recent Posts

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

1 minute ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

4 minutes ago

விஜய்யோட பிள்ளைங்க வந்து “எங்க அப்பா பாத்துக்கலைன்னு குறை சொன்னாங்களா..?” பிரபல ஜோதிடர் ஓபன் டாக்..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…

4 minutes ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவுக்கு அதிர்ச்சி… சற்றுமுன் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…

40 minutes ago

“போலி ஆதார்… வாடகைக்கு தாத்தா… 80 லட்சத்தை அள்ளிய மோசடி கும்பல்!”… … வில்லங்க சான்று பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி

சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…

46 minutes ago

ஈரானை அதிரவைத்த மர்ம மனிதர் ‘M’ யார்?… 30 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை… ஒரே ஒரு விபத்து… உலகையே அதிரவைத்த பின்னணி…!

அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…

50 minutes ago