“ஐயோ என்ன விட்டுருங்கடா”… கூலி தொழிலாளிக்கு எமனாக மாறிய நண்பனின் பணம்… பாசமாக பேசி அழைத்துச் சென்று வாலிபர் செய்த கொடூரம்…!

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த லிங்கேஷ் (41) என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது உடைய சுமித்ரா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ள நிலையில் லிங்கேஷ் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றார். குடும்பத்தின் செலவுக்காக லிங்கேஷ் தன்னுடைய நண்பனான சுரேஷ் என்பவரிடம் 34,000 கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் திரும்ப கொடுக்காததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது.

இதனால் லிங்கேஷ் ஏற்கனவே அடமானம் வைத்த தன்னுடைய மனைவியின் நகையை மீட்டு அதை விற்று கடனை செலுத்த முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து லிங்கேஷ் வீட்டுக்கு வந்த சுரேஷ் அவருடைய வாகனத்தில் லிங்கேஷை அழைத்துச் சென்றுள்ளார். பிறகு இருவரும் சென்று அடகு வைத்த நகையை மீட்டுள்ளனர். அப்போது பொன்னேரி கரை அருகே ஜே.ஜே.நகர் பகுதியில் லிங்கேஷுடன் தனது நண்பர்களான சுரேஷ், ரவுடி சரத், சம்பத், தசரதன் ஆகிய நான்கு பேருடன் பேசிக்கொண்டிருந்தார். லிங்கேஷ் தனது உறவினரான ராமமூர்த்தி என்பவரை அங்கு வரவழைத்து அவரிடம் நகையை விற்று பணத்தை எடுத்து வரும் படி கூறி இருக்கிறார்.

நகையை விற்கச் சென்ற ராமமூர்த்தி திரும்பி வருவதற்கு தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த சுரேஸ் உள்ளிட்ட நான்கு பேரும் லிங்கேஷை தாக்கி அவரது கழுத்து மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த லிங்கேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

3 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

3 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

3 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

3 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

3 மணத்தியாலங்கள் ago