தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என்று கொண்டாடப்பட்டவர் .அரசியலிலும் சரி , சினிமாவிலும் சரி கால் பதித்து கலக்கிய இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு சில ஆண்டுகளாக வே உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.ன் அவர் சமீபத்தில் சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின் பூரண குணமடைந்து விடு திரும்பினார். பிறகு நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். சினிமாவில் நடிகர் சங்க தலைவராக இருந்து இவர் செய்த சாதனைகள் ஏராளம் .அதேபோல அரசியலிலும் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் தலைவராகவும் சிறந்து விளங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வைரலானது .இதைத் தொடர்ந்து நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று திடீரென நடிகர் விஜயகாந்த் மரணம் அடைந்து விட்டார் என்ற மருத்துவமனை அறிக்கை வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்பொழுது ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும், அவரது தொண்டர்களும் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக அவர்களின் உடல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. ள்ளது. அடுத்ததாக நடிகர் விஜயகாந்தின் உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என்கிற கேள்வி எழுந்தது. விஜயகாந்தின் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் அவர்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கேட்டதாகவும், அதற்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், ஆனால் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை கொடுக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் உடல் தற்பொழுது பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. சாரை சாரையாய் மக்கள் கூட்டம் அவருக்கும் அஞ்சலி செலுத்தும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ..
ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து முடித்துவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட…
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பலருக்கும் தெரிந்த கே எஸ் ரவிக்குமாருக்கு மூன்று மகள்கள் உள்ளன. பொதுவாக இயக்குனர்கள் மற்றும்…
நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமா மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
நாளை கவின் நடிப்பில் இளன் இயக்கியுள்ள ஸ்டார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த…
நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட…
தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்கினாலும் உதவும் மனப்பான்மை என்பது சிலருக்கு மட்டுமே இருக்கின்றது. அப்படிப்பட்ட…