இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர்தான் கௌதமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி, கன்னடம் ,போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை மட்டும் அல்ல தொலைக்காட்சி தொகுப்பாளர் , ஆடை அமைப்பாளர் , தொலைக்காட்சி சீரியல் நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவரா என பல்வேறு துறையில் இவர் பணிபுரிந்துள்ளார்.

நடிகை கௌதமி ஆந்திரா மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர்.இவருடைய முழு பெயர் கௌதமி தண்டிமலா.

ரஜினியின் ‘குரு சிஷ்யன்’ படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்

‘நம்ம ஊரு பூவாத்தா’ என்ற படத்திருக்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் சிறப்பு பரிசு பெற்றார்.

‘நீ பாதி நான் பாதி’ என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றுள்ளார் .
‘நீ பாதி நான் பாதி’ என்ற படத்திற்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் பெற்றுள்ளர்.

இவரின் தமிழ் படங்கள் ரிக்சா மாமா, பணக்காரன், அபூர்வ சகோதரர்கள்,ராஜா கைய வச்சா, ராஜா சின்ன ரோஜா, தேவர் மகன், பாபநாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் சந்தீப் பாட்டியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார் .இருவர்க்கும் இடையே மன வருத்தம் காரணமாக விவாகரத்து பெற்றனர்.
கௌதமியின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


