சென்னை காவல் நிலையத்தில் பரபரப்பு… பெண் வழக்கறிஞரைக் கையப் பிடிச்சு இழுத்த ஆண் காவலர்…. மேலாடையை பிடித்து இழுத்து…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 12, 2026

Spread the love

சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களைப் பார்க்கச் சென்ற பெண்கள் மற்றும் பெண் வழக்கறிஞர் மீது காவலர்கள் தாக்குதல் நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டவர்களைப் பார்க்க வள்ளி மற்றும் திருமலை ஆகிய பெண்கள் காவல் நிலையம் சென்றுள்ளனர். அப்போது, அவர்களைப் போலீசார் தாக்கி வலுக்கட்டாயமாக லாக்கப்பில் அடைக்க முயன்றதாகவும், இதைத் தட்டிக்கேட்கச் சென்ற பெண் வழக்கறிஞர் ஜெயந்தி என்பவரையும் ஆண் காவலர் ஒருவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோவில், பெண் வழக்கறிஞரின் கையைப் பிடித்து ஆண் காவலர் ஒருவர் வலுக்கட்டாயமாக இழுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் ஊடகங்களிடம் பேசுகையில், காவல் நிலையத்திற்குள் இருந்த உதவி ஆய்வாளர் (SI) ஒருவர் பெண் என்றும் பாராமல் தங்களது மேலாடையைப் பிடித்து இழுத்து அநியாயம் செய்ததாகவும், இதனால் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

   

பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிவிட்டு, காவல் நிலையத்திலேயே வைத்துப் பெண்களை இதுபோன்று துன்புறுத்துவது கடுமையான மனித உரிமை மீறலாகும் எனப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, திமுக எம்பி கனிமொழி இச்சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். காவல் நிலையங்கள் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, தாக்குதல் நடத்தும் இடமாக மாறக்கூடாது என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

   

தற்போது இந்த விவகாரம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் துறை ரீதியான விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.