ஐகோர்ட் ஆப்பு வச்சும் அடங்காத ராஜினாமா விவகாரம்…. சபாநாயகர் கையில் இசக்கி சுப்பையாவின் ‘U-Turn’ கடிதம்….!

By Nanthini on புரட்டாதி 4, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக அளித்த கடிதம் தற்போது ஆய்வு நிலையில் உள்ளதாகச் சட்டப்பேரவைச் சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகே இது தொடர்பாக உரிய இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக, தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக இசக்கி சுப்பையா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், சபாநாயகரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.