அமைச்சர் மரிய வில்சன் தான் லஞ்சம் கொடுத்ததாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவரது சட்டப்பேரவை உறுப்பினர் சான்றிதழை தேர்தல் ஆணையம் உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெனீபர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையும் (DVAC) இந்தியத் தேர்தல் ஆணையமும் (ECI) இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் நேரடி இடமில்லாததால் இச்சம்பவத்தின் அடிப்படையில் அவரது அமைச்சர் பதவியை உடனடியாகப் பறிக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஊழலை வெளிப்படையாக ஏற்றுக் கொண்ட ஒரு மக்கள் பிரதிநிதி தொடர்ந்து பதவியில் நீடிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது எம்.எல்.ஏ. சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
