விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் சிறுமியின் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
கீழே விழுந்த அதிர்ச்சியில் அந்த மாணவிக்கு எதிர்பாராதவிதமாக பிரசவம் ஏற்பட்டு, வயிற்றில் இருந்த சிசு பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் மூலம் சிறுமி கர்ப்பமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்ததுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் சிவகாசி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியைக் கர்ப்பமாக்கியது அவருடைய காதலன் என்பது தெரியவந்ததை அடுத்து, காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
