“மரணம் கூட நிம்மதி இல்லாமயா…” காணக் சகிக்காத அவலம்… அமைச்சரின் ஊரிலேயே ஆம்புலன்ஸ் இல்லையா?… அரசை உலுக்கும் பழங்குடியினப் பெண்ணின் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

By Visaka on ஆடி 6, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில் சுமந்து செல்லப்பட்டபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவில், கிராம மக்கள் சிலர் அந்தப் பெண்ணைக் கட்டிலில் வைத்து, சேறும் சகதியுமான பாதையில் சுமந்து செல்வது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. தற்போதைய மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் இந்த ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், இச்சம்பவம் அம்மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பின் அவல நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் தற்பொழுது அம்மாநிலத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க தலைமையிலான அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. “வளர்ந்த பாரதம்” என்ற வாக்குறுதிகளுக்கு மத்தியில், கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களுக்கு அவசரக் காலத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட கிடைக்காததே இந்த மரணத்திற்குக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரசுத் தரப்பிலிருந்து இதுவரை விரிவான விளக்கம் எதுவும் அளிக்கப்படாத நிலையில், பெண்ணின் மரணம் மற்றும் அதற்கான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.