தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கியுள்ள நிலையில், “செந்தில்பாலாஜியை கைது செய்துவிட்டுத்தான் முதலமைச்சர் விஜய் கரூருக்குச் செல்ல வேண்டும் என்று சபதம் எடுத்திருக்கலாம்” என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி அதிரடியாகக் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் செந்தில்பாலாஜியைக் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் அதே வேளையில், மற்றொரு பக்கம் அவதூறு பேச்சு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
