பகீர்.. ஓடும் பஸ்சில் எச்சில் துப்ப.. முயன்ற ITI மாணவர்… தலை துண்டாகி பலி…! கர்நாடகாவில் நடந்த பயங்கரம்…!

By Swetha on ஆடி 3, 2026

Spread the love

கர்நாடக மாநிலத்தில் பேருந்து ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மாணவர் ஒருவர் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் நவலகுந்து பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரேஷ் (17). ஐ.டி.ஐ படித்து வந்த இந்த மாணவர், உப்பள்ளியில் இருந்து லட்சுமேஷ்வர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

   

பேருந்து லட்சுமேஷ்வர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியாக எச்சில் துப்புவதற்காக பக்கிரேஷ் தனது தலையை வெளியே நீட்டியுள்ளார். அப்போது அதே திசையில் மிக அருகில் வந்த மற்றொரு வாகனமோ அல்லது சாலையோரப் பகுதியோ எதிர்பாராத விதமாக மோதியதில், அவரது தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.