மரணம் நொடிப் பொழுதில் மிஸ் ஆனது..! இடிந்து விழுந்த மேற்கூரை… ஆறாவது அறிவால் உயிர் தப்பிய நாய்… இணையத்தைக் கலக்கும் வீடியோ…!!

By Swetha on ஆடி 1, 2026

Spread the love

டல்லாஸ் நகரில் உள்ள கேத்ரின் பாடிஸ்டா என்பவரது வீட்டின் வரவேற்பறையில் உள்ள சோபாவில் அவரது வளர்ப்பு நாய் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மேற்கூரையில் இருந்து லேசான சத்தம் கேட்டு, அது நகரத் தொடங்கியுள்ளது. விலங்குகளுக்கே உரிய ஆறாவது அறிவால் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்த அந்த நாய், உடனடியாக சோபாவில் இருந்து எழுந்து சுதாரிப்புடன் அந்த அறையை விட்டு வெளியேறியது. அது வெளியேறிய அடுத்த சில நொடிகளிலேயே, அந்த அறையின் மேற்கூரை மொத்தமாக இடிந்து கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்து நடந்த சமயத்தில் வீட்டின் உரிமையாளரான கேத்ரின் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். அவரது நண்பர் ஒருவர் அந்த நாயைப் பராமரித்து வந்துள்ளார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ‘ரிங்’ பாதுகாப்பு கேமராவில் இந்த முழு காட்சியும் பதிவாகியுள்ளது. கேத்ரின் வெளியூரில் இருந்து வந்து இந்த வீடியோவைப் பார்த்தபோது, தன் செல்லப் பிராணி நூலிழையில் உயிர் தப்பியதைக் கண்டு அதிர்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளார். மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

   

இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த பலரும் நாயின் அதிவேக சமயோசித புத்தியைப் பாராட்டி வருகின்றனர். “மனிதர்களை விட நாய் போன்ற விலங்குகளுக்குக் கேட்கும் திறன் நான்கு மடங்கு அதிகம் என்பதால், மேற்கூரை இடிவதற்கான அதிர்வை அது முன்கூட்டியே உணர்ந்து தப்பியுள்ளது” என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து, அந்த நாய் பாதுகாப்பாக இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.