தமிழக அரசில் அடுத்தடுத்து நடக்கும் 2 முக்கிய சம்பவங்கள்…. 10 மணிக்கு CM.. 10:30-க்கு அமைச்சர்… அதிரப்போகும் அரசியல் களம்…!

By Nanthini on ஆனி 25, 2026

Spread the love

தமிழக மின்சார வாரியத்தின் செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை, இன்று காலை 10:30 மணிக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார். முன்னதாக, இந்த அறிக்கை காலை 10 மணிக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மற்றொரு முக்கிய நிகழ்வினால் இதன் நேரம் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்தத் தொடக்க விழா நிகழ்வின் காரணமாகவே, மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு அரை மணி நேரம் தாமதிக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.