மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

By Nanthini on ஆனி 23, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார் என்ற தகவல் வெளியாகி, ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, தமிழக பெண்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டத்தின்’ கீழ் வழங்கப்படும் மாதாந்திர உரிமைத் தொகையை ரூ..2,500 ஆக உயர்த்துவது குறித்த அதிரடி அறிவிப்பை அவர் இன்று வெளியிடுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவது அல்லது புதிய சலுகைகளை வழங்குவது குறித்தும் முதல்வர் அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், இன்றைய பேரவை நேரலையைக் காண தமிழக மக்கள், முக்கியமாக இல்லத்தரசிகள் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர்.