தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதற்கான அதிகாரபூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 01.05.2025 முதல் 28.02.2026 வரையிலான காலகட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களின் நிலுவைத்தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் ₹5,932.23 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் இந்த திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் குறு, சிறு விவசாயிகளுக்கு ₹75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அவரது அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது அதற்கான அரசாணை முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி நடவடிக்கை மூலமாகத் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர விவசாயக் குடும்பங்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
