FLASH: பள்ளியில் துப்பாக்கிச் சூடு… 3 மாணவர்கள் உயிரிழப்பு..!!

By Soundarya on ஆனி 22, 2026

Spread the love

பிலிப்பின்ஸ் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருவர் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். 9 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரும் இப்பள்ளியில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், மாணவர்களின் பாதுகாப்புக்காகவும் பள்ளி வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.