தம்பியுடன் அந்த கோலத்தில் இருந்த மனைவி.. பார்க்ககூடாததை பார்த்த அண்ணன்… “அண்ணி எனக்கே சொந்தம்” தலையில் கல்லை தூக்கிப்போட்டு கதையா முடித்த கொடூரம்..!!

By Soundarya on ஆனி 19, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் சுல்தான்புரா பகுதியில், தனது அண்ணி குஷியுடன் (22) இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக, தம்பி போலா என்பவர் தனது சொந்த அண்ணன் அமித்தை (22) கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். அமித் ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தான் இவருக்குத் திருமணம் நடந்துள்ளது. அண்மையில் தனது மனைவியும் தம்பியும் தவறான உறவில் இருந்ததை அமித் நேரில் பார்த்து கண்டித்ததால், அவரைத் தங்களது பாதையிலிருந்து அகற்ற இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர்.

திட்டத்தின்படி, புதன்கிழமை அதிகாலை அமித் வீட்டை விட்டு வெளியே சென்றபோது, அவரது தம்பி போலா பின்தொடர்ந்து சென்றுள்ளார். அமித் ஆள்நடமாட்டம் இல்லாத வயல்வெளிப் பகுதியில் இருந்தபோது, போலா அவரது தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுத் தாக்கியதுடன், முகத்தை சிதைத்து, துணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அமித்தின் உடல் ரத்த வெள்ளத்தில் வயலில் கண்டெடுக்கப்பட்டது.

   

கொலைக்குப் பிறகு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய போலாவை, அப்பகுதி சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்தனர். மேலும், தங்களது கள்ளத்தொடர்பு விவகாரம் வெளியில் தெரிந்த பயத்தில் அண்ணி குஷி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரும் மீட்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளார்.