மழைக்கால மண் வாசனைக்கு இப்படி ஒரு பெயரா..? ஆனந்த் மஹிந்திரா சூட்டிய அந்த பெயர் – இணையத்தில் செம வைரல்..!!

By Soundarya on ஆனி 17, 2026

Spread the love

கோடை வெயிலுக்குப் பிறகு பெய்யும் முதல் மழையின் போது, காய்ந்த மண்ணில் விழுந்து எழும் மண் வாசனை அனைவரையும் மயக்கக் கூடியது. இந்த மண் வாசனைக்கு அறிவியல் பூர்வமாக ‘பெட்ரிகோர்’ ன்று பெயர். புகழ்பெற்ற தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இந்த வார்த்தையின் பின்னணியில் உள்ள சுவாரசியமான கதையைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள தகவலின்படி, ‘பெட்ரிகோர்’ என்ற வார்த்தை இரண்டு கிரேக்க சொற்களிலிருந்து உருவானது. ‘பெட்ரா’ என்றால் கல் அல்லது பாறை என்றும், ‘ஐகோர்’ என்றால் கிரேக்க புராணங்களின்படி கடவுள்களின் நரம்புகளில் ஓடும் ஒரு வகையான திரவம் என்றும் பொருள்படும். அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இதற்கு ‘பாறைகளின் இரத்தம்’ என்று அர்த்தம் கொள்ளலாம் என அவர் விளக்கியுள்ளார்.

   

இருப்பினும், இந்த அறிவியல் விளக்கம் இந்தியாவின் மழைக்கால உணர்வோடு முழுமையாகப் பொருந்தவில்லை என்று ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார். இந்தியர்கள் முதல் மழையை ஒரு காதல் உணர்வோடு எதிர்நோக்குவதால், இந்த மயக்கும் மண் வாசனைக்கு ‘தில் கா சோர்’ (Dil Ka Chor – இதயத்தைத் திருடிச் சென்றவன்) என்ற தேசி பெயர் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அவர் வேடிக்கையாகக் கூறியுள்ளார். இவரது இந்த அழகான பதிவும், புதிய பெயரிடலும் இணையத்தில் பலரது வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.