நள்ளிரவில் ஃபியூஸ் கட்டைகள் திருட்டு.. மின்வெட்டுக்கு பின்னால் இருக்கும் சதிவலை..? உண்மையை உடைத்த அமைச்சர்..!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

தமிழகத்தில் சில இடங்களில் நள்ளிரவு நேரங்களில் வேண்டுமென்றே மின்சார ஃபியூஸ் கட்டைகள் (Fuse carriers) திருடிச் செல்லப்படுவதாகத் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் ஆங்காங்கே ஏற்படும் தொடர் மின்வெட்டு மற்றும் மின்தடை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். மின்வாரியத்தின் சீரான பணிகளைத் திட்டமிட்டு தாமதப்படுத்தும் நோக்கிலும், அரசுக்குக் கெட்டப் பெயரை உண்டாக்கும் சூழ்ச்சியுடனும் சமூக விரோதிகளால் இத்தகைய செயல்கள் நள்ளிரவில் அரங்கேற்றப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும், இதுபோன்ற மின்தடை பாதிப்புகள் கண்டறியப்பட்ட உடனேயே மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபியூஸ் கட்டைகள் எடுக்கப்பட்ட விவரம் தெரிந்த சுமார் 40 நிமிடங்களிலேயே புதிய ஃபியூஸ் கட்டைகள் பொருத்தப்பட்டு, மின் விநியோகம் உடனடியாகச் சீரமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.