BREAKING: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது.. சற்றுமுன் பரபரப்பு…!!

By Soundarya on ஆனி 7, 2026

Spread the love

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னை சைதாப்பேட்டையில் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கர், தமிழ்ப் புலவர் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்துச் சித்திரரித்ததாகக் கூறி, அவருக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மதிமுக சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை பனகல் மாளிகை அருகே கருப்புச் சட்டை அணிந்து திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மதிமுகவினர் ஆளுநரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக வைகோ தலைமையிலான மதிமுகவினர் ஆளுநர் மாளிகையை (ராஜ் பவன்) முற்றுகையிடுவதற்காகப் பேரணியாக நோக்கிச் செல்ல முயன்றனர். அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி முன்னேற விடாமல் தடுத்தனர். காவல்துறையினரின் தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தைத் தொடர முயன்றதால், பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மதிமுக நிர்வாகிகளை போலீசார் அதிரடியாகக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.