“இனி ஏமாற்ற முடியாது” ரேஷன் கடைகளில் வரவுள்ள புதிய மாற்றம்… தமிழக முதல்வர் உத்தரவு..!!

By Swetha on ஆனி 5, 2026

Spread the love

தமிழக ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் துல்லியமான எடையை உறுதி செய்வதற்காக, தமிழக அரசு ஒரு புதிய அதிரடித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன்படி, கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்கள் அனைத்தும் நுகர்வோரை வந்தடைவதற்கு முன்பே, கிடங்குகளிலேயே அதிநவீன இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பான பாக்கெட்டுகளாக மாற்றப்படவுள்ளன. இந்த நவீன முறையின் மூலம் ரேஷன் பொருட்களில் கலப்படம் செய்வது முற்றிலும் தடுக்கப்படுவதோடு, எடைக்குறைவு மற்றும் பொருட்கள் கடத்தல் போன்ற நீண்டகாலப் புகார்களுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை குறித்து விளக்கமளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன், கிடங்குகளிலேயே பொருட்கள் பாக்கெட் செய்யப்பட்டு நேரடியாகக் கடைகளுக்கு அனுப்பப்படுவதால், விநியோகச் சங்கிலி மிகவும் வெளிப்படையானதாக மாறும் எனக் குறிப்பிட்டுள்ளார். ரேஷன் கடைகளில் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எடையளந்து வழங்க வேண்டிய அவசியம் இல்லாததால், பொதுமக்களுக்குப் பொருட்கள் மிக வேகமாகக் கிடைக்கும். இதன் மூலம், ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட நேரம் வெயிலிலும், வரிசையிலும் காத்து நிற்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டு, பொதுவிநியோகத் திட்டம் மேலும் எளிமையாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.