தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கும் முக்கிய விவகாரங்களை மையப்படுத்தி ஒரு தனியார் நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ஒருவரே, முதல்வரின் ஒட்டுமொத்த நிர்வாகப் பணிகளையும் முன்னின்று கவனித்து வருவதாக அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
குறிப்பாக, அவரது உதவியாளர் அனைத்து அரசுத்துறைச் செயலாளர்களையும் நேரில் சென்று சந்திப்பதோடு, அந்தச் சந்திப்புகளின் போது உதவியாளரின் மொபைல் போனில் இருந்து ஆலோசகருக்கு உடனடியாக அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த போன் கால்கள் மூலமாகவே துறைச் செயலாளர்களுக்கு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, எந்த நேரமும் போனும் கையுமாகவே வலம் வரும் அந்த ஆலோசகரின் உதவியாளர், தற்போதைய தலைமைச் செயலக வட்டாரத்தில் ஒரு முக்கிய அதிகார மையமாகப் பார்க்கப்படுகிறார் என்றும் அந்த நாளிதழ் செய்தி விவரித்துள்ளது.
