BREAKING: “அதிமுக ஒன்றிணைய வேண்டி” அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி..!!

By Soundarya on ஆனி 1, 2026

Spread the love

தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளரான மகேந்திரன், “அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும்” என்று உருக்கமாகக் கோரி தனது கடைசி நிமிட வீடியோவைப் பதிவு செய்துவிட்டு, பெட்ரோல் ஊற்றித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தற்போதைய சூழல் மற்றும் பிளவுகள் குறித்து மிகுந்த மனவேதனையில் இருந்த அவர், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது இந்த இறுதி வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களிலும் கட்சித் தொண்டர்களிடையேயும் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், உயிரிழந்த அதிமுக நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதற்கும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளுக்குச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.