அந்த கத்திய எடு.. அவன கார்ல ஏத்து.. கூலி தொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல்.. தவெக நிர்வாகியின் செயலால் பரபரப்பு..!

By Swetha on வைகாசி 30, 2026

Spread the love

சென்னை தாம்பரம் அருகே புதிய பெருங்களத்தூர் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கட்டடத் தொழிலாளியைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ‘ஆய்வு செய்வதாகக்’ கூறி வந்த தவெக நிர்வாகி அங்கிருந்த தொழிலாளியைக் கன்னத்தில் அறைந்து கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் தவெக கொடி கட்டிய காரில் வந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

இந்த விவகாரம் கட்சித் தலைமைக்குத் தெரியவந்ததை அடுத்து, கட்சியின் நற்பெயருக்குக் களம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த குறிப்பிட்ட நிர்வாகியைத் தவெக தலைமை உடனடியாகக் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி (சஸ்பெண்ட் செய்து) உத்தரவிட்டுள்ளது.