“திமுக MLA-க்கள் உடனே ராஜினாமா செய்யுங்க” EPS-ஐ CM ஆக்க முயன்றபோது எங்கே போனது சூடு சொரணை..? “பதிலடி பலமாக இருக்கும்” எனப் பகிரங்க எச்சரிக்கை..!!

By Soundarya on வைகாசி 29, 2026

Spread the love

தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றது முதல் திமுகவினர் தூக்கத்தை இழந்து தவித்து வருவதாகக் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் விமர்சித்துள்ளார். மேலும், மாணிக்கம் தாகூரை ராஜினாமா செய்யச் சொல்ல திமுகவினருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றும் அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் தங்களைக் கழுவிக் கழுவி ஊற்றிய எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க முயன்றபோது திமுகவினருக்கு எங்கே போனது சூடு, சொரணை என்று சாடியுள்ளார். அதிமுகவினரைப் போல் சூடு, சொரணை இருந்தால், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

   

இனிவரும் காலங்களில் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சிறுமைப்படுத்த முயன்றால், அதற்கான பதிலடி மிகவும் பலமாக இருக்கும் என்பதைத் திமுகவினருக்குப் பகிரங்க எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்வதாகவும் கணபதி சிவக்குமார் தனது அறிக்கையில் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.