BREAKING: ஒரே நாளில் 3 விக்கெட்… அதிமுக MLA-க்கள் அடுத்தடுத்த ராஜினாமா… செம ஷாக்கில் இபிஎஸ்….!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா மற்றும் பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் JCD பிரபாகரனிடம் நேரில் வழங்கியுள்ளனர்.

இந்த அடுத்தடுத்த ராஜினமாக்களின் காரணமாக, சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் பலம் தற்போது 44 ஆகக் குறைந்துள்ளது. இதில் குறிப்பாக, அண்மையில் விஜய் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது மரகதம் குமரவேல் எதிர்த்து வாக்களித்திருந்த நிலையில், தற்போது இந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் ஒரே நேரத்தில் பதவியை துறந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.