தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு..? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

By Soundarya on வைகாசி 25, 2026

Spread the love

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளித் திறப்பு தேதியை உறுதிப்படுத்தினார். நீண்ட விடுமுறைக்குப் பின் உயர் வகுப்புகளுக்கான வகுப்புகள் வழக்கம் போல் அன்றைய தினமே தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், ஆரம்ப நிலை வகுப்புகளான 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. சிறிய குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டும், வெயிலின் தாக்கத்தைக் கண்காணித்தும் இந்தச் சிறிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.