BREAKING: கோவை சிறுமி கொலை… “குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை” முதல்வர் விஜய் ஆவேசம்..!!

By Soundarya on வைகாசி 23, 2026

Spread the love

கோவையில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் தன்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவிட்டுள்ளார். இத்தகைய மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமுதாயத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய 2 குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் விஜய், இந்தச் சம்பவம் தொடர்பாக விரைவான விசாரணை நடத்தி அவர்களுக்கு உரிய கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.