திருச்சி GH-ல் நடந்த கொடூரம்… 19 வயது நர்ஸிங் மாணவியின் மரணம்…. வெடித்தது போராட்டம்… விஜய்க்கு அடுத்த நெருக்கடி…!

By Nanthini on வைகாசி 23, 2026

Spread the love

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் (GH) தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நர்ஸிங் மாணவி உயிரிழந்ததாகக் கூறி, சக மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 வயதான நர்ஸிங் மாணவி சீதாலட்சுமி, மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பிற்காக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கப்பட்டதே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணம் என சக மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தச் சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்; சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் ரமேஷ் மாணவிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், தங்களுக்குத் தகுந்த நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்து தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.