SSLC மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்று முதல் உங்க தற்காலிக மார்க் ஷீட் ரெடி… கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

By Muthu Mani on வைகாசி 22, 2026

Spread the love

தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி, மொத்தம் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்ற இந்தத் தேர்வை சுமார் 8.82 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் கொண்டு www.tnresults.nic.in உள்ளிட்ட அரசு இணையதளங்கள் வாயிலாக முடிவுகளைத் தெரிந்து கொண்டனர்.

   

மாவட்ட வாரியான தேர்ச்சிப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் (97.54%) இரண்டாம் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டம் (97.41%) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. அடுத்தடுத்த இடங்களில் திருச்சி (97.31%) மற்றும் கன்னியாகுமரி (97.30%) ஆகிய மாவட்டங்கள் முன்னிலை வகிக்கின்றன. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் அவர்கள் படித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழியாக வழங்கப்பட உள்ளன. தனித்தேர்வர்கள் இதனை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

   

தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலைப் (ஸ்கேன் நகல்) பெற விரும்பினால், இன்று காலை 11 மணி முதல் வரும் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) பள்ளிகள் அல்லது தேர்வு மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்; இதற்கு பாடவாரி கட்டணமாக ரூ.275 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே, அடுத்து வரும் நாட்களில் விடைத்தாள் மறுக்கூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.