வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மே 21-ஆம் தேதி 290 பேருந்துகளும், மே 22-ஆம் தேதி 595 பேருந்துகளும், மே 23-ஆம் தேதி 650 பேருந்துகளும் எனப் பெருமளவிலான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இதேபோல் திருப்பூர், ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தடையற்ற பயணத்தை உறுதி செய்யவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் கழகம் தெரிவித்துள்ளது.
