அதிமுகவில் இணைவதற்கு தவெகவின் ஆதவ் அர்ஜுனா தீவிர முயற்சி மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை தனக்கு வழங்குமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் (EPS) ஆதவ் அர்ஜுனா கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதற்கு அதிமுக தலைமை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிராகரிப்புக்குத் தற்பொழுது பழிவாங்கும் நோக்கில் திமுக – அதிமுகவை தொடர்புபடுத்தி அவர் அவதூறு பரப்பி வருவதாகக் குறிப்பிட்ட ஓ.எஸ்.மணியன், அதிமுகவில் அதிருப்தியில் இருந்த நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு ஆதவ் அர்ஜுனா குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
