விஜய் Cabinet-ல் நுழையும் புதிய முகங்கள் யார் யார்?…. வெளிவந்த பரபரப்பு பட்டியல்… நாளைக்கு பெரிய சம்பவமே இருக்கு….!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்பொழுது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அவருடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இருப்பினும், ஆட்சி அமைந்து சுமார் 10 நாட்களுக்கு மேலாகியும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில், தவெக அமைச்சரவை நாளை அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

   

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில், அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணியினர் இடம்பெறுவார்களா என்கிற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், தவெக அமைச்சரவையில் அதிமுகவினர் இடம்பெறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், தவெக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று தவெக தரப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று அதிகாரப்பூர்வமாக நேரடி அழைப்பு விடுத்துள்ளார்.

   

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “எங்களது அரசு சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் மிகவும் உறுதியாக இருக்கும். சமூக நீதி கொள்கையுடைய காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்த அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் விரும்புகிறார்; இதைப் பற்றி அவர்கள் ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், விசிக சார்பில் திருமா அண்ணனுக்கும் தாங்கள் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளதாக அவர் பிரஸ் மீட்டில் உறுதிப்படுத்தினார்.

 

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மக்களின் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட்டு, பின்புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டினார். மேலும், “திமுகவும் அதிமுகவும் இணைந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டன. தங்களின் கட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே சி.வி. சண்முகம் அணியினர் தவெகவை ஆதரித்தனரே தவிர, அமைச்சர் பதவிக்காக அல்ல. தவெக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை, திமுகவே இது போன்ற தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது” என்று ஆதவ் அர்ஜுனா காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.