BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

By Soundarya on வைகாசி 19, 2026

Spread the love

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். எதிர்பாராத இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த கதிரேசன், பிரேம்குமார், கணேசன் மற்றும் அருண்குமார் ஆகிய நால்வருக்கும் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியதோடு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.