தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், தகுதியான பயனாளிகளுக்குச் சரியாகச் சென்றடைவதை அதிகாரிகள் தங்குதடையின்றி உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மின்சாரத்துறை மற்றும் உயர்நிலை அதிகாரிகள் பங்ககேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதனை வலியுறுத்தினார். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் முழுமையான பலனைப் பெறுவதை அதிகாரிகள் கள ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய உற்பத்தியை கணிசமாகப் பெருக்கும் வகையில், விவசாயப் பெருமக்களுக்கு எவ்வித தடையுமின்றி சீரான மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதோடு மட்டுமின்றி, வரவிருக்கும் பருவமழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தற்காப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பெருமழை மற்றும் புயல் காலங்களிலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தடையில்லா மின் விநியோகம் செய்யத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின்சார வாரியம் இப்போதே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
