உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில், இளம்பெண் ஒருவர் ஐந்து பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், தனியார் விடுதி (ஹோட்டல்) ஒன்றின் மேலாளர் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் இணைந்து இந்த அராஜகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார்படி, அந்த ஹோட்டல் மேலாளர் உட்பட நான்கு பேர் முதலில் தனக்குக் கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்துள்ளனர். பின்னர், அவர் நிலைகுலைந்த சமயம் பார்த்து அவரது ஆடைகளைக் கிழித்து, நான்கு பேரும் வரிசையாகத் தன் மீது கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட இளம்பெண் சமூக வலைத்தளங்களில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தனக்கு நேர்ந்த அநீதியைக் கூறி உதவி கோரியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
