ஆப்பிரிக்க கண்டத்தில் தற்போது எபோலா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் கடுமையான உடல்நல பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த எபோலா வைரஸ் பரவலை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் சர்வதேச அளவிலான சுகாதார நெருக்கடியாக (Global Health Emergency) அறிவித்துள்ளார். இதன் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் யாரும் தற்போது ஆப்பிரிக்க கண்டத்திற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
