தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடின்றி, முறைகேடுகள் ஏதுமின்றி நியாயமான முறையில் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் சில நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகள் நடப்பதாகப் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தத்தமது தொகுதிகளுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் நேரில் சென்று முறையான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த உத்தரவின் ஒரு பகுதியாக, மதுரை மத்தியத் தொகுதிக்கு உட்பட்ட மேலப்பொன்னகரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் (MLA) முஸ்தபா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தரம் மற்றும் அளவு குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, ரேஷன் கடைகளில் இனி முறைகேடுகள் குறையும் என்று சாமானிய மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.
