‘அதிகாரம்’ இப்படித்தான் இருக்க வேண்டும்!… அமைச்சர் புஸ்சி ஆனந்திற்கு விஜய் செய்த ‘மாஸ்’ காரியம்… தலைமைச் செயலகத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சிச் சம்பவம்..!!!

By Muthu Mani on வைகாசி 18, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு கடந்த 10-ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக்கொண்டது. கட்சியின் தலைவரான ஜோசப் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழா முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த வாரம் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இன்று புதிய அமைச்சர்கள் அனைவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தங்களது பிரத்யேக அறைகளில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளைத் தொடங்கினர். அந்த வகையில், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜூனா தனது அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து, அதே பொதுப்பணித்துறையின் மற்றொரு முக்கியப் பிரிவிற்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செங்கோட்டையனும் பொறுப்பேற்றுக்கொண்டார். செங்கோட்டையன் பொறுப்பேற்றுக் கொண்ட போது முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வந்து அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

   

அதேபோல், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக புஸ்சி ஆனந்த் இன்று தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட தருணத்தில், முதலமைச்சர் விஜய் நேரில் வருகை தந்து, அமைச்சர் புஸ்சி ஆனந்தை வாழ்த்தி அவரது அமைச்சரவை இருக்கையில் அமரவைத்தார். இந்த நிகழ்வு அங்கிருந்த நிர்வாகிகளிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

   

மற்றொருபுறம், சுகாதாரத்துறை அமைச்சராக அருண்ராஜ், உணவுத்துறை அமைச்சராக வெங்கட் ரமணன், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக நிர்மல் குமார் ஆகியோரும் தங்களது பணிகளைத் தொடங்கினர். மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன், கனிம வளத்துறை அமைச்சராக டி.கே.பிரபு மற்றும் தொழில்துறை அமைச்சராகக் கீர்த்தனா ஆகியோரும் இன்று தத்தமது அறைகளில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டனர். பொறுப்பேற்றுக்கொண்ட அனைத்து அமைச்சர்களுக்கும் அந்தந்தத் துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.