தமிழகத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளின் கூட்டுறவு சங்க வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ போன்ற அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது விவசாயிகளின் நலன் காக்கும் இந்த புதிய முயற்சி அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
கடன் சுமையால் தவித்து வரும் ஏழை, எளிய விவசாயிகளுக்கு வாழ்வாதார நம்பிக்கையளிக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மகிழ்ச்சி அறிவிப்பை, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்படவிருக்கும் வரவிருக்கும் புதிய பட்ஜெட்டில் முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் எனத் தெரிகிறது.
