“திமுகவுக்கு விழுந்த பலத்த அடி”… சற்றுமுன் தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி.. ஸ்டாலின் தலையில் இடியை இறக்கிய விஜய்…!

By Nanthini on வைகாசி 16, 2026

Spread the love

கோவை மாவட்ட அரசியல் களத்தில் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கிய திமுக முன்னாள் செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட இவர், வெறும் 2,456 வாக்குகள் என்ற மிகக் குறைந்த வித்தியாசத்தில் தன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

   

இதனைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு மீண்டும் போட்டியிட திமுக தலைமை சீட் வழங்க மறுத்ததால், அதிருப்தியடைந்த சண்முகசுந்தரம் வட கோவை மாவட்ட திமுக பொறுப்பிலிருந்து விலகி மேட்டுப்பாளையம் தொகுதியில் சுயேச்சையாகக் களம் கண்டார். இந்தத் தேர்தலில் அவர் தனித்து நின்று 26,766 வாக்குகளைப் பிரித்ததன் மூலம் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரின் தோல்விக்கு மிக முக்கியக் காரணியாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில், கோவை மண்டலத்தில் வலுவான அடித்தளம் கொண்ட சண்முகசுந்தரத்தின் இந்த தவெக நோக்கிய வரவு, அப்பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் அரசியல் பலத்தையும், திமுகவிற்கு தற்காலிக பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.