ஆசைஆசையாக வந்த ராணுவ வீரருக்கு சர்ப்ரைஸ் மரணம்… நள்ளிரவில் கணவர் மற்றும் மாமனாரை துண்டு துண்டாக வெட்டி எரித்த மனைவி… கிருஷ்ணகிரியில் பகீர் இரட்டைக் கொலை..!!

By Swetha on வைகாசி 15, 2026

Spread the love

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலனுடன் இணைந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மனைவி பானுப்ரியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரரான மகேஷ் குமார், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதற்காக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 30 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். கோடை விடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க அவர் திட்டமிட்டிருந்த நிலையில், அவரது வருகை மனைவிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த மகேஷ் குமார், அவரது கைபேசியைச் சோதித்தபோது உள்ளூர் பெயிண்டரான பூவரசன் என்ற 20 வயது இளைஞருடன் பானுப்ரியாவுக்குக் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. கைபேசியில் இருந்த நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் நீண்ட நேர அழைப்புகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகேஷ் குமார், மனைவியைக் கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பானுப்ரியா, கணவரின் ராணுவ ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொண்டு கள்ளக்காதலனுடன் வாழத் திட்டமிட்டு, நள்ளிரவில் கணவர் உறங்கிக் கொண்டிருந்தபோது பூவரசனை வீட்டிற்குள் வரவழைத்துக் கணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த மாமனார் செல்லப்பனையும் அவர்கள் இருவரும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்து, உடல்களை மூட்டைகளில் கட்டித் தனித்தனி இடங்களில் டீசல் ஊற்றி எரித்துள்ளனர்.

   

உறங்கிக் கொண்டிருந்தபோது நடந்த இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர் மகேஷ் குமார் பலத்த காயங்களுடன் தீவிரமாகப் போராடியுள்ளார். இந்த மோதலின் போது கள்ளக்காதலன் பூவரசனின் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கொலைக்குப் பின்னர் காயத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காக பூவரசன் உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்றதே, காவல்துறையினர் இந்த இரட்டைக் கொலை வழக்கின் துப்புகளைத் துரிதமாகக் கண்டறிந்து இருவரையும் கைது செய்ய முக்கியக் காரணமாக அமைந்தது.