அமெரிக்கா VS சீனா “மோதினால் உலகம் இருக்காது!”.. அமெரிக்காவுக்குச் சீன அதிபர் கொடுத்த இறுதி எச்சரிக்கை.. பதறும் உலக நாடுகள்…!!!

By Muthu Mani on வைகாசி 14, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருபெரும் உலகத் தலைவர்களும் பீஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ வளாகத்தில் இன்று சந்தித்துப் பேசினார்கள். சுமார் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகள் குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அப்போது அமெரிக்க வணிகத் தலைவர்களிடம் பேசிய ஷி ஜின்பிங், வெளி உலகிற்கான சீனாவின் கதவுகள் மேலும் விரிவாகத் திறக்கப்படும் என்று உறுதியளித்தார்.

   

இந்தச் சந்திப்பின் போது சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்காவிற்கு நான்கு முக்கிய “சிவப்பு கோடுகளை” நிபந்தனைகளாக விதித்தார். அதன்படி, தைவான் விவகாரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள், சீனாவின் அரசியல் அமைப்பு மற்றும் சீனாவின் வளர்ச்சி உரிமை ஆகிய நான்கு விஷயங்களில் அமெரிக்கா சவால் விடக்கூடாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். வல்லரசுகளுக்கு இடையிலான மோதலைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், ‘துசிடிடிஸ் பொறி’ (Thucydides Trap) விதியை மேற்கோள் காட்டி, இரு நாடுகளும் மோதிக்கொண்டால் உலகம் சீரழிந்துவிடும் என்று எச்சரித்தார்.

   

வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையில், சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 60% இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலாக அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்தார். அதன்படி, அமெரிக்க விவசாயிகளிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள சோயா பீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றைச் சீனா பெருமளவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற டிரம்பின் நிபந்தனைக்கு ஷி ஜின்பிங் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில், ரஷ்யாவிற்கு ராணுவ உதிரிப்பாகங்களை அனுப்புவதையும், அவர்களுக்கு உதவுவதையும் சீனா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.

 

பேச்சுவார்த்தையின் இறுதியில், இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுக உறவை விரும்பும் விதமாகச் சில சுமூகமான உரையாடல்களும் இடம்பெற்றன. வரவிருக்கும் அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்க மக்களுக்கும் அதிபர் டிரம்பிற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே, இந்த இரண்டு உலகத் தலைவர்களின் சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.